கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஜேஷ்குமார் (18). இவர் திருச்சியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது விடுமுறையில் வந்துள்ள அஜேஷ்குமார் நேற்றிரவு நண்பர்களுடன் சேர்ந்து உலக கால்பந்து போட்டியை அந்த பகுதியில் அமைக்கப்பட்ட திரையில் கண்டு ரசித்து அதிகாலை வீடு திரும்பினார்.
வீட்டின் அறையில் படுக்க சென்ற அவர் காலையில் பெற்றோர் அழைத்தும் வெளியே வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் மின் விசிறியில் போர்வையால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளச்சல் போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே பைக் வைத்திருக்கும் அஜேஷ்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெற்றோரிடம் புதிய ரேஸ் பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், வாங்கி கொடுக்காததால் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து, தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அஜேஷ்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.