திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காதலி பேசாமல் புறக்கணித்தால் கோபமடைந்த காதலன் காதலியின் ஆண் நண்பரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
திருச்சி மாவட்டம், தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி 19 வயதான சரண்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் கல்லூரி மாணவி சரண்யா தினமும் கல்லூரிக்கு சென்றுவந்த ஸ்ரீ ரெங்கநாதன் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றும் நாகேஸ்வரனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரண்யா காதலன் கார்த்தியிடம் பேசாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
தன்னிடம் காதலி பேசாததற்கு நாகேஸ்வரன்தான் காரணம் என கோபமடைந்த கார்த்தி தனது நண்பர்கள் குணா, ராக்கி ஆகியோருடன் மதுபோதையில் சமயபுரம் நால்ரோடு அருகே பேருந்தை வழிமறித்து நாகேஷ்வரனை தாக்கியுள்ளனர்.
அப்போது பேருந்து ஓட்டுனர் துரை தடுத்தபோது அவரையும் மதுபோதையில் இருந்த மூன்று பேரும் தாக்கியதுடன் பேருந்து கண்ணாடியையும் கற்களை வீசி உடைந்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நாகேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் கார்த்தி, குணா, ராக்கி மூன்று பேரின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தை வழிமறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.