Categories: தமிழகம்

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை: சொகுசு வாழ்க்கை மோகத்தால் சிக்கிய கல்லூரி மாணவர்கள்..!!

புதுச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை போலிசார் கைது செய்தனர்.

திருபுவனை காவல்நிலைய போலிசார் திருபுவனை, நெட்டப்பாக்கம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை மற்றும் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.


இந்நிலையில் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போலிசார், அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், வாடகைக்கு வீடு எடுத்து அந்த கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதையடுத்து வீட்டில் சோதனை செய்ததில், அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. மேலும் கஞ்சாவை பாக்கெட் போட்டுக் கொண்டிருந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

இதில், ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களான ராஜேஷ் (வயது 22), வீரகலைமணி (23) மற்றும் திருபுவனையை சேர்ந்த தாமோதரன் (22), விக்னேஷ்குமார் (26), எழிலன் (19) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் திருபுவனை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆகாஷ் (22), அரியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23), காமேஷ் (19) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு கஞ்சா தேவைப்படுவதுபோல் பேசி வரவழைத்து அவர்களை போலிசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 125 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கஞ்சா பொட்டலங்களை பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள், 750 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.