சென்னையில் ஓடும் ரயிலில் பட்டா கத்திகளுடன் பிளாட்பாரத்தில் உரசி அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் சிலர், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதும், பட்டா கத்திகளை வைத்து சக பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கண்டறிந்து, அறிவுரை கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநில கல்லூரி மாணவர்கள், சென்னை புறநகர் மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கத்திவாக்கம், அத்திப்பட்டு ரயில்நிலையத்தில் இருந்து தொங்கியபடி அட்டகாசம் செய்தனர்.
ரயிலில் பயணம் செய்த ரயில் பயணிகள் மற்றும் இதனை வெளியில் இருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என அச்சத்தில் உறைந்தவர்கள் இந்த அராஜகத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.
இந்த வீடியோக்களின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான நான்கு கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.