Categories: தமிழகம்

கல்லூரி மாணவர்களை காவு வாங்கிய மரணக் கிணறு மூடப்படுமா? சாலையோர கிணறுகளால் தொடரும் உயிர் பலி : பொதுமக்கள் கோரிக்கை!!

கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர்.

கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் 18 வயதான ஆதர்ஸ் என்ஜினீயங் மாணவரான இவரும், இவரது நண்பர்களும் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சென்றுள்ளனர்.

ஓணம் கொண்டாட்டம் முடிந்து திரும்பிய போது கிணற்றில் கார் விழுந்து, மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த காரை ரோஷன் ஓட்டியுள்ளார், காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார்.

ஆதர்ஷ், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ரோஷன் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கார் கிணற்றுக்குள் பாய்ந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்னமநல்லூர் ஊராட்சியில் 2 கிணறுகளும், தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 3 கிணறுகளும், பூலுவப்பட்டியில் ஒரு கிணறும் சாலையோரத்தில் உள்ளது. இங்கு விபத்துகள் நிகழ்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே திறந்த வெளி கிணறுகளை இரும்பு கம்பிகள் கொண்டு மூடவேண்டும். சாலையோர கிணறுகள் அருகே வேகத்தடுப்பு அமைக்க வேண்டும். திறந்த வெளி கிணறுகளை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

29 minutes ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

1 hour ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

2 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

2 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

3 hours ago

ரஜினி கூட டான்ஸ்.. சகுனி வேலை பார்த்த நயன்தாரா : நடிகை வருத்தம்!!

சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…

3 hours ago

This website uses cookies.