கோவையில் சிக்னலில் பட்டாகத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் : அலறிய வாகன ஓட்டிகள் : வைரலான வீடியோ!!
கோவை – பொள்ளாச்சி சாலையில், ஈச்சனாரியை அடுத்துள்ள எல் அன்ட் டி நால்ரோடு சிக்னல் சந்திப்பு அருகே, தனியார் உயர்கல்வி நிறுவனம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட நால்ரோடு சந்திப்புப் பகுதியில் வாகனங்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன.
ஒருபுறம் வாகனங்கள் செல்ல, மற்ற மூன்று வழித்தடங்களில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அபபோது பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.
அந்த சமயத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் பட்டாக் கத்திகளுடன் இருசக்கர வாகனத்தில், சிக்னல் சந்திப்பில் வட்டமடித்தபடி கூச்சலிட்டவாறும், வாகன ஓட்டிகளை மிரட்டியவாறும் சுற்றினர். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சிலர் அவர்களின் செயலை வீடியோ எடுத்தனர்.
சிலர் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸார் வருவதற்குள் அவர்கள் தப்பிச் சென்றனர். வீடியோ காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்தனர்.
அதில் கையில் பட்டாக் கத்திகளை வைத்து மக்களை அச்சுறுத்தியபடி சுற்றியவர்கள், தனியார் கல்வி நிறுவனத்தில் பி.காம் சிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவர்கள் எனத் தெரிந்தது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருவதும், கல்லூரி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது, அதையொட்டி பொதுவெளியில் அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றியதும் தெரிந்தது.
இதையடுத்து ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல், தகாத வார்த்தையில் பேசுதல், ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து அதில் 17 வயதான ஒரு மாணவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.