Categories: தமிழகம்

வந்தா வாங்க.. வராட்டிப் போங்க : நிருபர்கள் கேட்ட கேள்வி.. திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பதில்!

வந்தா வாங்க.. வராட்டிப் போங்க : நிருபர்கள் கேட்ட கேள்வி.. திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பதில்!

திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்திருந்தார். பிரதமர் மோடியை வரவேற்க பலர் வந்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வராமல் இருந்தது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்க்ப்பட்டது.

இது குறித்து பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடியை வரவேற்க வருபவர்களில் பெரிய தலைவர்கள் சின்னத் தலைவர்கள் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என மனதார நினைப்பவர்கள் வரவேற்க வந்தால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை வரவேற்க வராதவர்களை நினைத்து தாங்கள் வருத்தப்படப் போவது கிடையாது என்றும் அதேபோல் போன் போட்டு வரவேற்க வாங்க என தாங்கள் அழைக்கப் போவதும் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். பிரதமர் மோடி கடந்த காலங்களில் எப்போது தமிழ்நாடு வந்தாலும் வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ கட்டாயம் செல்லக் கூடியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் இன்று திருச்சியில் பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க அவர் வரவில்லை.

இதன் மூலம் பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்த்தியிருப்பதால் இது அரசியல் களத்தில் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

13 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

13 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

14 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

14 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

15 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

16 hours ago

This website uses cookies.