Categories: தமிழகம்

ஆட்டிசம் பாதித்த ஏழைக் குழந்தைகளின் பெற்றோருக்கு உதவ முன் வாருங்கள் : கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

கோவை: ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் ஏழைப் பெற்றோருக்கு உதவுமாறு கோவையில் நடைபெற்ற ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியுள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி உலக ஆட்டிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் ஆட்டிசம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கோவையில் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் சிறப்பு பள்ளிகள் மற்றும் வழக்கமான பள்ளிகளின் முதல்வர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், உளவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தங்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக மியூசிகல் கீபோர்டு, பாடல், இசை ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது : இந்த நிகழ்ச்சியை ஒரு முன்னுதாரணமான நிகழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள் மேடையை கைப்பற்றியுள்ள நிகழ்ச்சியாக இது உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் எனது பாராட்டுக்கள்.

சிறப்பு குழந்தைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலமாக அவர்களை மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதனை படிப்படியாக மாவட்ட நிர்வாகம் வழி நடத்தும். இது அரசின் திட்டமாகவே மாறும்.

முதலமைச்சரும், மருத்துவத்துறை செயலாளரும் இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். குழந்தை வளரும் போது அந்தக் குழந்தை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, பழக்கவழக்க ரீதியாகவோ ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அப்படியான குழந்தைகள் இருக்கும் பொழுது, நமது குழந்தைக்கும் திறன் உள்ளது என்ற மனப் பக்குவத்தை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு படி நிலைகளுக்கும் ஆதரவாக நமது சமூகம் இருக்க வேண்டும். இங்குள்ள பெற்றோர் முகத்தில் சாதித்துக் காட்டி உள்ள தன்னம்பிக்கையைத் தெரிகிறது. இதுபோன்று சிரமப்படும் மற்ற மக்களையும் நாம் ஒரு குழுவாக இருந்து ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.

இதேபோல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக ளின் ஏழைப் பெற்றோர் களுக்கு நீங்கள் உதவ வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்

தொடர்ந்து கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : எங்கள் சிறப்பு பள்ளியில் ஆட்டிசம் மற்றும் கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஆட்டிசம் குறித்தும், அதற்கான பயிற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்த 2 முதல் 3 வயதிற்குள் முறையான பயிற்சி பெற்றால் அந்த குழந்தை வழக்கமான பள்ளிக்கு சென்று படிக்கும் அளவுக்கு தயாராகும். எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா, விளையாட்டு, பேச்சு, கண்னி ஆகியவை குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கௌமார மடாலய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…

21 minutes ago

அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…

33 minutes ago

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…

1 hour ago

19 மாணவர்களின் உயிருக்கு பதில் என்ன? படியும் ரத்தக்கறை.. ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…

2 hours ago

தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…

3 hours ago

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

16 hours ago

This website uses cookies.