ஈரோடு : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் போற்றும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கலம் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கு அனைத்து வணிகர் சங்கத்தினர் மற்றும் ஓய்ஸ்மேன் கிளப் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களைப் போற்றும் வகையில் சத்தியமங்கலம் ஓய்ஸ்மேன் கிளப், அனைத்து வணிகர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் சார்பில் பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கலம் 5வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜானகி ராமசாமிக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து பெண்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.