கோவை: கோவை ப்ரூக் பாண்ட் சாலையில், உள்ள சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இன்று துவக்கி வைத்தார்.
கோவை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று, 32 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், 24 துணை சுகாதார நிலையங்களிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும், 50 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும், 137 அங்கன்வாடிகள் மற்றும் மண்டபங்களிலும், 10 மொபைல் முகாம்களிலும், 11 இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், அமைக்க பட்டுள்ள டிரான்ஸிட் முகாம்கள் மற்றும் 80 பிற இடங்கள் என மொத்தமாக மாநகர் முழுவதும் 355 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று நடைபெறுகின்றது.
போலியோ செட்டு மருந்து முகாம்களில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலியோ சொட்டு மருந்து தினமான இன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கும்படி குழந்தைகளின் பெற்றோர்களை மாநகராட்சி ஆணையர், ராஜ கோபால் சுன்கரா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவை சிதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் முகாமில் தாய்மார்கள் கலந்து கொண்டு தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.