Categories: தமிழகம்

‘தொடர் பாலியல் தொல்லை’…சூப்பர்வைசர் மீது பெண் துப்புரவு தொழிலாளி புகார்: பழனி நகராட்சியில் ‘ஷாக்’!!

பழனி நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றும் மாரிமுத்து என்பவர் பாலியல் ரீதியான தொல்லை தருவதாக பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் துப்புரவு பிரிவில் டெங்கு ஒழிப்பு பணியாளராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் பழனி நகராட்சியில் துப்புரவுத் மேற்பார்வையாளராக பணி புரியும் மாரிமுத்து என்பவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, பழனி நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளராக பணி புரியும் மாரிமுத்து என்பவர் துப்புரவு பிரிவில் பணியாற்றும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்.

துப்புரவு பணியாற்றும் பெண்களை தனியார் விடுதிக்கு அழைப்பதாகவும், அங்குவைத்து கை,கால்கள் அமுக்கி விடச்சொல்வதாகவும், மேலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

தன்னையும் இதுபோன்று மாரிமுத்து அழைத்தாகும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சாதியை சொல்லியும், தகாத வார்த்தைகளாலும் திட்டுவதாகவும், தொடர்ந்து பணி செய்வதில் இடையுறு செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பழனி நகராட்சி ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து துப்புரவு மேற்பார்வையாளர் மாரிமுத்து தெரிவித்ததாவது, அந்த பெண் சரியாக பணி புரியாததால் பணி நீக்கம் செய்தோம். அதனால் கோபமடைந்த அப்பெண் தன் மீது அபாண்டமாக பலி சொல்வதாகவும், தன்னை பற்றி துப்புரவு பணியாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

11 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

12 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

13 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

13 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

14 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

14 hours ago

This website uses cookies.