சாதி பெயரை சொல்லி பெண்ணை காலணியால் அடித்ததாக புகார் : கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு!!
நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அதை ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கவிதா (40)என்பவர் கூட்டத்திற்கு வந்துள்ளார்.
அப்போது முன்பு அதே பணியில் பணியாற்றிய ரேவதி என்பவர், கவிதாவிடம் வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி, அவர் ஜாதியை பற்றி இழிவாக பேசியது மட்டுமின்றி, தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பசுவந்தனை காவல் நிலையத்தில் கவிதா புகார் மனு அளித்துள்ளார் . தொடர்ந்து பசுவந்தனை காவல் நிலைய சிறப்பு உதவியாளர் மார்த்தாண்ட பூபதி, விசாரணை நடத்தி ரேவதி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.