மணல் கொள்ளை புகார் எதிரொலி : தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!
விழுப்புரம் ஏனாதிமங்கலம் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள அளவில் தான் மண் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் இந்த சோதனையானது மத்திய பாதுகாப்புத்துறை காவலர்களுடன் நடைபெற்று வருகிறது.
ஏனாதிமங்கலம் ஆற்றுப்பகுதியில் 11 ஹெக்டர் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் குவாரிக்கு ஒப்புதல் பெற்று இருந்தாலும் தொடர்ந்து அதிக அளவில் விதிகளுக்கு புறம்பாக மணல் கொள்ளை அடிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டு எழுந்து உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறப்பட்டது 11 ஹெக்டர் பரப்பளவில் ஒரு மீட்டர் (3.5 அடி) ஆழத்தில் மட்டுமே மணல் அள்ள இரண்டு வருடம் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக குவாரி இயங்காத நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
This website uses cookies.