விழுப்புரம் : கை விடப்பட்ட தண்ணீர் தேங்கி நிற்கும் கல்குவாரியில் இருசக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை ஊராட்சியில் இரவு நேரங்களில் அனுமதி பெறாமல் கல்குவாரியில் கல் எடுப்பதாக புகாரின் அடிப்படையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வானூர் திருவக்கரை ஆகிய இடங்களிலுள்ள கல் குவாரிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று கைவிடப்பட்ட குவாரிகளில், மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அப்பகுதி மக்களிடம் குவாரிகளில் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் கேட்டு அறிந்துகொண்டார். இருசக்கர வாகனத்தில் சென்று குவாரியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மோகன் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமும், நெகிழ்ச்சியும் அடைந்தனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.