சென்னை : சேலையூரில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தவரின் வீட்டிற்கு முன்னால் உள்ள பகுதிக்கு மட்டும்சாலை போடாமல் பணியை முடித்த ஒப்பந்ததாரர்கள். இதுகுறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் இளங்கோ ரகுபதி. இவர் குடியிருக்கும் பகுதியில் தற்போது மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவர் வீடு இருக்கும் பகுதி மழை மற்றும் வெள்ளம் போன்ற சமயங்களில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடப்பதாகவும், புதிய சாலை அமைக்கும் முன் பழைய சாலையை தோண்டி எடுத்த பின்பே சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் இளங்கோ ரகுபதி நேரடியாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் இளங்கோ ரகுபதியிடம் புகாரை திரும்ப பெறும்படி கூறியுள்ளனர். இதற்கு இளங்கோ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பகுதியில் சாலைகள் அமைக்கும் போது, புகாரளித்த இளங்கோ ரகுபதியின் வீட்டிற்கு முன்னால் உள்ள பகுதிக்கு மட்டும் சுமார் 80 மீட்டர் சாலை போடாமல் பணிகளை ஒப்பந்த தாரர்கள் முடித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது, தகவலை இணையத்தில் வைரலாகி, இதற்கு கண்டனம் எழுந்து வருகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.