புதுச்சேரி அரசு மகளிர் கல்லூரியில் இருதரப்பு மாணவிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவிகளுக்காக பிரியாவிடை நிகழ்ச்சி (Farewell party) நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வேறொரு துறையைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வரலாம் என இறுதியாண்டு மாணவிகள் கேட்டதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் கல்லூரி வாயிலில் இரு தரப்பு மாணவிகளும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.