தமிழகம்

திருப்பதி கூட்ட நெரிசலில் என் மனைவி எப்படி இறந்தார் தெரியுமா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மறுக்கும் உறவினர்கள்!

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி பலர் மிதித்ததில் தனது மனைவி உயிரிழந்ததாக கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள திருமலையில் இருக்கும் ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் (TTD) அறிவித்திருந்தது.

இதற்காக பல்வேறு இடங்களில் என மொத்தம் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி, டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டைப் பெற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.

அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேநேரம், அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இதில், சேலம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த இரு பெண்களும் உயிரிழந்தனர். மேலும், சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!

இந்த நிலையில், உடல்நலக் கோளாறால் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய மனைவி கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் மிதித்ததில் உயிரிழந்ததாக அவர் கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், இரவு 07.30 மணிக்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய எனது மனைவியைக் காணவில்லை என காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அங்கு சென்ற பார்த்தபோதுதான் தன்னுடைய மனைவி உயிரிழந்த விவரம் தனக்கு தெரிய வந்ததாகவும் ஆந்திராவைச் சேர்ந்த நபர் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

13 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

14 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

16 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

18 hours ago

This website uses cookies.