தமிழகம்

பொன்முடி மேல ஒரு கண்ணு போல.. திமுகவை கடுமையாக சாடிய காங்கிரஸ் நிர்வாகி!

மயிலாடுதுறையில், அமைச்சர் பொன்முடியை அலறவிட்டவன் என காங்கிரஸ் மேலிட நிர்வாகி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், அமைச்சர் பொன்முடியையே நான் அலறவிட்டவன் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய குலாம் நபி, “கட்சியில் பலமான கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, நம்மை நாம் வளர்த்துக் கொள்ள முடியும், நீங்கள் (காங்கிரஸ் கட்சியினர்) ஏன் எடுத்ததும் திமுக மாவட்டச் செயலாளரிடம் செல்கிறீர்கள்? முதலில் ஒன்றியம், கிளை அளவில் உள்ளவர்களிடம் நன்றாக இருங்கள்.

அவர்கள் (திமுக) இப்போது தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என நியமித்து இருப்பார்கள். அதனைப் போல் நாமும் நிர்வாகிகளை நியமித்து, கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுகவினர் கட்சியை கட்டமைப்புடன் நிர்வாகிகளைக் கொண்டு நியமித்து, நம்மை பலவீனப்படுத்திவிட்டனர்.

நீங்கள் உங்களுக்குத் தேவையானதை காங்கிரஸ் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என எல்லாரிடமும் கேட்டுப் போராடி பெறுங்கள். இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும், பொன்முடியையே நான் அலறவிடுவேன், இப்போதும் போராடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், அவர் என் நண்பர் தான், பேராசிரியர் தான்” என்றார்.

இதையும் படிங்க: 4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி

முன்னதாக, தவெக மாநாட்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நகர்வுகள் தமிழகத்தில் சற்று வித்தியாசத்தை உணர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வரும் நிலையில், இவ்வாறு திமுகவினரையும், திமுக கட்சிக் கட்டமைப்பையும் இவ்வாறு கூறி வருவது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

7 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

9 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

9 hours ago

This website uses cookies.