விழுப்புரம் : புதிய பேருந்து நிலையம் எதிரே உயர்கல்வி துறை அமைச்சரால் துவங்கி வைக்கப்பட்ட ஆவின் பாலகத்தில் சிகரெட் கேட்டு மதுபோதையில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் ரகளையில் ஈடுபட்டு பணியாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உயர்கல்வி துறை அமைச்ச்சர் பொன்முடி அவர்களால் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆவின் டீ ,பால் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை திறந்து வைத்தார்.
இந்த கடையை சுந்தர் என்பவர் நடத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு விழுப்புரம் நகராட்சி 42 வது வார்டு உறுப்பினராக உள்ள காங்கிரசை சார்ந்த சுரேஷ் ராம் என்பவர் நகராட்சி ஒப்பந்ததாரர்களான விஜி மற்றும் அவரது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஆவின் பாலகத்திற்கு சென்று சிகரெட் கேட்டுள்ளனர்.
ஆவின் பாலகத்தை நடத்துவதால் இங்கு சிகரெட் விற்பனை செய்வதில்லை என கடையில் பணிபுரியும் 55 வயதான வீரகுமார் என்பவர் தெரிவித்துள்ளார். சிகரெட் விற்பனை செய்யாமல் ஏன் ஆவின் பாலகம் நடத்துகிறீர்கள் என கேட்டு காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ் ராம் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி பணியாளரின் சட்டையை இழுத்து பாட்டிலால் அடித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஆவின் பாலக கடை உரிமையாளர் சுந்தர தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மது போதையில் ரகளையில் ஈடுபடுவது தெரியவந்தது.
அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினரே மது போதையில் ரகளை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.