பெண்ணின் ஆடையை விலக்கி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் : அதிர்ச்சி சம்பவம்!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல் கனிராஜா (வயது 55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார் .
இவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 7ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அவரது மனைவி உள்ளிட்டோர் இரண்டு அறைகள் எடுத்து தங்கி இருந்தனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உடன் வந்தவர்கள் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க சென்ற நிலையில் உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு அப்துல் கனி ராஜா அவரது அறைக்கு சென்று மருத்துவ உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கறிஞர் மனைவி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அப்துல் கனிராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேல் விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன்,கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் விசாரணை நடத்தினர்.
அப்துல்கனி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கொண்டு சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் வாசலில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் கொடைக்கானல் அரசுமருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பிறகு நீதி மன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.