Categories: தமிழகம்

அரசியல் ஒரு முழு நேர ஓட்டப்பந்தயம்… ராகுலை நினைவுபடுத்தி முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த காங்., எம்பி ஜோதிமணி..!!

அரசியல் ஒரு முழு நேர ஓட்டப்பந்தயம் என்று ராகுல் காந்தி ஜி சொன்னதை நினைவு கூர்ந்து , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணி புகழ்ந்து பேசினார்.

கரூர் மாநகருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வந்திருந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொத்தம் ரூ 581.44 கோடி மதிப்பீட்டில் 99 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், 28.60 கோடி மதிப்பீட்டில் 95 முடிவுற்ற பணிகளுகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளின் சார்பில் 500.83 கோடி மதிப்பீட்டில் 80,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முன்னதாக, கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கரூர் மாநகருக்கு முதல்வரான பின்னர் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணனை வரவேற்கின்றேன் என்றும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம், மக்கள் வெள்ளம் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்து வருவதையும் நினைவு கூர்ந்தார்.

அதுமட்டுமில்லாமல், குதிரை பேரத்தின் மூலம், நான் ஆட்சிக்கு வரமாட்டேன், மக்களின் அன்பு பெற்று முதல்வராவேன் என்று அன்று கூறியது எங்களுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. பதவி வரும் போது பண்பு வரவேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல, பதவியிலும், நல்ல பணிவும் இருக்கும் நல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று புகழ்ந்து தள்ளினார்.

முதல்வர் ஆவதற்கு முன்னர் எப்படி இருந்தீர்களோ, அப்படியே தான் முதல்வர் ஆன பின்னரும் உள்ளீர்கள் என்றும், ஒரு பணிவோடும், அசூர முனைப்போடும் செயல்படுவது தமிழக மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம், அதே போல், தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி சொல்வார்கள். அரசியல் ஒரு நீண்ட நாள் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் ரேஸ் கிடையாது, உண்மையான அன்பும், மக்களுக்கான அரசும், இந்த அரசு மட்டும் தான்.

ஆகையால், பெண்கள் பொதுவாழ்விலும், போராட்டத்திலும் உள்ளார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டுமே இந்த அரசு என்று நடத்தி வருவதற்காக கரூர் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினராக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். ஆகையால் நீங்கள் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

கரூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கல்லூரிகளையும் கொடுத்துள்ளீர்கள் அதற்காக நன்றியினையும் தெரிவித்து கொண்டார். மேலும், பெரியதாதம்பாளையம் ஏரியினை தூர்வாரி அதில் நீரினை ஏற்றி நீர்வளத்தினை பெருக்க இந்த அரசு எடுக்க வேண்டுமென்றும், இந்தியாவின் நான்காவது ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. ஆகையால், கரூருக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையை உருவாக்க முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

2 minutes ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

48 minutes ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

2 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

3 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

4 hours ago

This website uses cookies.