குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட தண்டனையாக செந்தில் பாலாஜி ராஜினாமாவை பார்ப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் செய்தியாளர்கள் சந்தித்தபோது பேசியதாவது:- EVM மிஷினில் எனக்கு நம்பிக்கை உண்டு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VV பேட் அமைத்து ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்தால் பலரது சந்தேகங்கள் தீரும்.
டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். ஆனால், அதனை ஒடுக்குவது என்ற சர்வாதிகாரப் போக்கை பாஜக கடைபிடிக்கிறது. தமிழக ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை சட்ட சபையில் காட்டக்கூடாது. மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்கள் பிரதிபலிக்கிறோம். மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். தமிழக அரசு ஊழியர்களின் பென்சன் கோரிக்கையை தமிழக அரசு நிதி நிலைமைக்கு ஏற்ப தான் அமல்படுத்த முடியும், என்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.