Categories: தமிழகம்

அண்ணாமலை நடந்தால் ஒன்னும் ஆகப்போவதில்லை… நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இது தான் நடக்கும் ; அடித்து சொல்லும் திருச்சி எம்பி ..!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடை பயணத்திற்கும் ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதாக திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நீதியிலிருந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த நிலை மற்றும் கூடுதல் நிதி தேவைப்படும் பணிகள் ஆகியவை குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது:- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடைபயணத்திற்கும், ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. அண்ணாமலை 10 கிலோமீட்டர் நடந்தால் என்ன அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது.

நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக அறிவித்து களமிறங்கப்படுகிறது. இப்போது எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்வார்கள். தமிழக ஆளுநர் தமிழக அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார் என்பதை தெளிவாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக அரசு தற்போது குடும்ப பெண்களுக்கு வழங்க உள்ள உரிமை தொகை, நிதி நெருக்டி காரணமாக தான், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதி உள்ள ஏழை பயனாளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு அனைவருக்கும் வழங்க வாய்ப்புள்ளது. கொரோனா காலகட்டத்தில் பத்து கோடி ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து தராததால், தொகுதிகளில் மக்கள் களப்பணிகள் செய்ய முடியவில்லை. தற்போது மக்களை சென்று சந்திக்கும் போது, எதுவுமே செய்யவில்லை என்று குறை கூறுகின்றனர்.

இந்த வருட பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதியை இதுவரை வரவில்லை. உடனடியாக மத்திய அரசு இந்த வருட நிதியை விடுவிக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பாக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். பொம்மை வழக்கிற்கு பின்பாக எந்த ஒரு மாநில அரசையும் நேரடியாக மத்திய அரசு கலைக்க முடியாது. ஆனால் அந்த ஆட்சி இல்லாமல் போவதற்கு கட்சியை உடைப்பது, எம்எல்ஏ வை விலக்கி வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அரசை செயல்பட விடாமல் முடக்கும் செயலையும் மத்திய அரசு செயல்படுகிறது. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை தமிழகம் சந்தித்தாலும், ஆட்சி கலைந்தாலும் பரவாயில்லை. பாஜகவிற்கு எதிராக அடுத்த தேர்தலில் யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் பணியில் பின் வாங்க மாட்டோம் என்ற ரீதியில் தான் முதல்வர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான், தற்போது இதனை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பிரதமராக ஏற்றுக்கொள்வார்கள், எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!

பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…

5 hours ago

பிக்பாஸ்ல இருந்து Payment வரல; அவன் இப்படி ஆனதுக்கு காரணம்? ஸ்ரீயின் தோழி ஓபன் டாக்…

 ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …

6 hours ago

கூட்டணிக்கு ‘துண்டு’? பிரதமர் மோடிக்கு திடீர் புகழாரம் சூட்டும் பிரேமலதா!!

பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…

9 hours ago

அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…

சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…

9 hours ago

சமந்தாவுக்கு கெட் அவுட்.. புதுமனைவிக்கு கட் அவுட் : நாக சைதன்யா டபுள் கேம்!

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…

9 hours ago

துருவ் விக்ரமுடன் டேட்டிங் சென்ற அனுபமா? இணையத்தை அதிரவைத்த அந்தரங்க புகைப்படம்…

துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…

10 hours ago

This website uses cookies.