ராகுல் காந்தியின் 2ம் கட்ட நடைப்பயணம் I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று திருச்சியில் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெயின்காட்கேட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான காமராஜர் அரங்கில் பொங்கல் விழா, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினர் ஆகிய ரெக்ஸ் தலைமையில்
நடைபெற்றது.
நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சியினருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட மாநகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர் கூறியதாவது :- காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய 2ம் கட்ட நடை பயணத்தை வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்க உள்ளார். அவரின் முதல் பயணம் இமாலய வெற்றி பெற்றது போல, இரண்டாவது பயணமும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். மேலும் I.N.D.I.A. கூட்டணிக்கு வலு சேர்க்கும், காங்கிரஸ் கட்சியையும் பலப்படுத்தும். வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அந்த நடைபயணம் எளிதாக்கும். அந்த நடைபயணம் வெற்றி பெற தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பில்கிஸ் பானு விவகாரத்தில் 11 பேரை விடுதலை செய்து குஜராத் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தான். அவர்களின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விமான நிலைய திறப்பு விழா முழுமையாக அரசு விழாவாக நடைபெறவில்லை. அந்த விழாவில் அரசியல் கலப்பு இருந்தது. அதனால் தான் அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது, என தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.