கன்னியாகுமரி அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டி துன்புறுத்தியும், பலாத்காரம் செய்து விடுவேன் என காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகேயுள்ள மேக்காமண்டபம், பூச்சிகாட்டு விளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி நிக்சன். இவரது மகள் அபின்சிலா மேரி (22). இவர் நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை சந்தித்து இன்று மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் எம்பிஏ படித்து இருக்கிறேன். அப்பா கூலி வேலை செய்து வருகிறார். எனது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். எனது வீட்டில் அருகில் உள்ள அப்பாவுக்கு உரிமை பெற்ற சொத்தை எனது அம்மா மருத்துவ பார்த்த செலவின கடன் பிரச்சினை காரணமாக இரண்டு சென்ட் நிலத்தை ஞான ஜெபின் (விலவூர் பஞ்சாயத்து துணைத்தலைவர், காங்கிரஸ் கட்சி) என்பவருக்கு ஒன்பது லட்சம் ரூபாய் 48% கந்து வட்டிக்கு வாங்கி வாங்கினார்.
மேற்படி பணத்திற்கு மாத வட்டியாக ரூபாய் 36,000 தவறாமல் கொடுத்து வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி எனது அப்பா, ஞான ஜெபினிடம் அசல் தொகையை திரும்பத் தருகிறேன். எனது சொத்தை திரும்ப எழுதி தாருங்கள் என்று கேட்டதற்கு, ஞான ஜெபின் மேற்படி பணத்திற்கு கந்துவட்டியாக 2 லட்சம் ரூபாய் அதிகமாக கேட்டு பணத்தை தந்தால் தான் எழுதித் தருவேன் என்று மிரட்டினார்.
எனது அப்பாவும் அவர் கேட்ட இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி மேற்படி சொத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்டார். ஆனால் சொத்தை கேட்டால் உன் மகளை சீரழித்து விடுவேன். உன் மகளை பலாத்காரம் செய்து கொன்று விடுவேன் என்று தொடர்ந்து அவர் மிரட்டினார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசி வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று என்னை மிரட்டினார்.
அதன் பின் 16 ஆம் தேதி மீண்டும் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஞான செபின் மற்றும் ஜோஸ் ஆகியோர் சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்தால், “நீ காலேஜுக்கு போகும்போது உன்னை தூக்கிப் போய் கூட்டாக பலாத்காரம் செய்து கொன்று விடுவோம்,” என்று மிரட்டினார்கள். இது தொடர்பாக கொற்றிக்கோடு மற்றும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி நபர்களால் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் , இவ்வாறு அதில் தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.