Categories: தமிழகம்

எத பண்ணாலும் நொட்ட சொல்லிட்டே இருப்பாங்க.. என்னோட விருப்பம் இதுதான் விஜய் வசந்த் பளிச்..!

குமரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் நிகழ்வை மேல்புறம் சந்திப்பு பகுதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தபின் மக்களோடு மக்களாக சிறிய ஹோட்டலில் தோசை உண்டபின் துவங்கினார்.

நடந்து முடிந்த குமரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டாவது நாளாக மேல்புறம் சந்திப்பில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர் தனது முதல் கூட்டத்திலேயே குமரி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்து 14 கோடி ருபாய் பெற்றுள்ளேன் விரைவில் இதற்கான பணிகள் நடைபெறும் அதோடு மட்டுமல்லாமல் நான்கு வழிச்சாலை பணியும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு தென்னிந்தியாவையே வஞ்சிப்பதாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களை எல்லாம் முழுமையாக வஞ்சிக்கிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. அதேபோல்தான் வயநாட்டிலும் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையிலும், கண்டிப்பாக இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து வருகிறார்.

அதை செய்ய அரசு செய்ய முன்வர வேண்டும் சட்டம் இல்லை என்றாலும் போதுமான நிதியை ஒதுக்கி கொடுத்திருக்க வேண்டும். ஏன் சந்திரபாபு நாயுடு நிதீஷ்குமாருக்கும் 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கொடுக்கும் அரசுக்கு இதற்கு தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முடியாதா வயநாடு சம்பவம் நிகழ்ந்த உடனேயே தமிழகத்தின் அனைத்து மலையோர பகுதிகளிலும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நீலகிரியில், இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறும் என்ற ஒரு வதந்தி பரவி வருகிறது. இது போன்ற எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை நமது தமிழக அரசு எடுத்து வருகிறது. சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில்தான் இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது.

எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இதற்கான ஒரு கமிட்டி அமைத்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் அமைதியாக இருக்கும். சிறுபான்மையினரை சீண்டி பார்க்கும் செயலில் தான் மத்திய அரசு செய்கிறது. எந்த ஒரு சிறுபான்மையினரும் நம் நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நமது அரசு செய்து கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதனை எதிர்க்கவும் ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். அதில், நல்லது எது என்று தெரிந்து செயல்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் என பேசினார். தொடர்ந்து, விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து வருகிறார். உடன் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டும் உள்ளார்.

Poorni

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

10 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

11 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

12 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

12 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

13 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

14 hours ago