Categories: தமிழகம்

காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பூட்டு.. கொடியை அகற்றிய தமாகா : வெடித்த போராட்டம்!

பழனி ரயில் நிலைய சாலையில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவராக இருந்த சுந்தர் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். சுந்தர் தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர்.

மேலும் கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை அகற்றிவிட்டு காங்கிரஸ் கொடியை ஏற்றினர். இந்தநிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் பற்றி வருவாய் துறையின் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கட்சி அலுவலகத்தில் இருந்த இரண்டு தரப்பினரையும் வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை பூட்டினர். வருவாய்த் துறை அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி யாரிடம் ஆவணம் உள்ளதோ அவருக்கு கட்சி அலுவலகம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டுச் சென்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.