Categories: தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…

திருச்சி : திருச்சியில் நடைபெறும் வேட்புமனு பரிசீலனை பணிகளை மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளுக்கும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கும் 14 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 401 வார்டுகளில் நேற்று மாலை 5 மணி வரை பெறப்பட்ட மனுக்கள் அனைத்த இன்று மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் போட்டியிடக் கூடிய திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், எஸ்டிபிஐ,

நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும். சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அரியமங்கலம், கோ -அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களில் வேட்புமனுகள் சரிபார்ப்பு பணி வேட்பாளர்கள் முன்னிலையில் காலை முதலே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்பு மனுக்களில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வேட்பு மனுக்களை உறுதி செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் அனைத்து மனுக்களும் மறுபரிசீலனை முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

மேலும், வரும் 7ம்தேதி வேட்புமனு திரும்பப் பெறப்படும். அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வரும் 9ம் தேதி அதிகாரிகள் வெளியிட உள்ளனர். நடைபெறும் வேட்புமனு பரிசீலனை பணிகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் 5நகராட்சி மற்றும் 14 பேர் ஊராட்சிகளிலும் பெறப்பட்ட மற்றும் மனுக்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் அனைத்து கோட்ட அலுவலகங்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

KavinKumar

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

10 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

10 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

11 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

13 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

13 hours ago

This website uses cookies.