கோவை : பீளமேடு பகுதியில் நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்காக தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அடிக்கல் நாட்டினார்.
கோவை மாவட்டம் வார்டு எண் 26 க்குட்பட்ட, பீளமேடு, பயனீர் மில் சாலையில் தமிழக 15 வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில், நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
முன்னதாக, துவக்கவிழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சரை வரவேற்கும் விதமாக, 26 வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, பொன்னாடை வழங்கி வரவேற்றார்,
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மதிமுக மாவட்ட துணை செயலாளர்,
ஆர், சற்குணம், பகுதி செயலாளர் எஸ்பி வெள்ளியங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு என பலரும் கலந்து கொண்டனர்.
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
This website uses cookies.