Categories: தமிழகம்

பல பெண்களுடன் தொடர்பு… கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன் : இரண்டு மகள்களுடன் நீதி கேட்டு போராடிய பெண்!!

திருப்பூர் : தனது கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வரும் நிலையில், அவரிடம் உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ஆத்துபாளையத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 36). இவர் நேற்று தனது மகள்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் பத்மாவதியிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து பத்மாவதி போலீசாரிடம் கூறியதாவது:- எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம். எனது கணவர் பரந்தாமன். நாங்கள் இருவரும் திருப்பூர் ஆத்துப் பாளையத்தில் வசித்து வந்தோம். எங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இருவரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து குடும்பத்துடன் இருந்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர் பரந்தாமனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நான் கேட்கும் போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் என்னை அவர் அடித்து கொடுமைப் படுத்தி துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அப்போது அதிகாரிகள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அதற்கு சற்று கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே என்னை ஏமாற்றிய கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மகள்களின் வாழ்க்கை கருத்தில் கொண்டு பரந்தாமனிடம் இருந்து எனக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

10 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

10 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

11 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

12 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

13 hours ago

This website uses cookies.