சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவில் உள்ள பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இம்மலைப்பாதையில் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு கோழி தீவன மூலப்பொருட்கள் ஏற்றுக்கொண்டு கண்டைநேர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.
வாகனத்தை மதுரையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது திம்பம் மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்டபோது லாரி பிரேக் பழுதடைந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.