Categories: தமிழகம்

சென்னையில் தொடரும் கனமழை… கழிவு நீர் அடைப்பா? குடிநீர் பிரச்சனையா? தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை குடிநீர்வாரியம் சார்பில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2000 களப்பணியாளர்கள் கள பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குடிநீர் விநியோக அமைப்பில் தேவைக்கேற்ப ஆங்காங்கே குளோரின் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான ப்ளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற ரசாயன பொருட்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் அடைப்பு ஏற்படும் 502 இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் அடைப்பு தேக்கம் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளில் குடிநீர் வாரியத்தைச் சேர்ந்த களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் சார்ந்த புகார்களை 044 – 45674567 மற்றும் 1916 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

17 minutes ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

26 minutes ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

1 hour ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

1 hour ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

1 hour ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

2 hours ago

This website uses cookies.