திருச்சி : டெண்டர் பில்லுக்கு 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பாலம், கட்டிடம், சாலை போடும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்ததாரர்களில் ஒருவரான முஹம்மது இஸ்மாயில் என்பவர் புத்தாநத்தம் ஊராட்சியில் நடைபெற்று முடிந்த பணிகளுக்கான ஒப்பந்த தொகையை பெறுவதற்கு ஊராட்சி செயலர் வெங்கட்ராமனை அணுகினார்.
அப்போது 4 லட்சம் ரூபாய் செக் கொடுக்க வேண்டும் என்றால் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வெங்கட்ராமனை கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத இஸ்மாயில் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அவரின் அறிவுறுத்தலின் பேரில் 6ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை இஸ்மாயில், வெங்கட்ராமனுக்கு கொடுத்துள்ளார்.
வெங்கட்ராமன் லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து வெங்கட்ராமன் அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.