கோவை: கோவையில் வாக்களிக்க வந்த கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. கோவையில் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இறுதியாக 5 மணி நிலவரம் வெளியிடப்பட்டது அதில் கோவை மாவட்டத்தில் மொத்தமாக 56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மேலும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும் என்றும்,
5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே கோவையில் வாக்களிக்க வரும் கொரோனா நோயாளிகளுக்கு பி.பி.இ கிட் கூட வழங்காமல் வாக்களிக்க வைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவர் இன்று மாலை 5 மணிக்கு மேல் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்க வந்தார். ஆனால் அவரையும் சாதரணமாக கையாண்டுள்ளனர் தேர்தல் அதிகாரிகள். கொரோனா நோயாளிகளுக்கு பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு உடைகள் வழங்கி, தொற்று பரவல் தடுப்பை உறுதிப்படுத்தாமல் அதிகாரிகள் செய்த இந்த செயல் அங்கிருந்த மற்ற மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
This website uses cookies.