தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவர் கடந்த மே 28ம்தேதி தனது வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த போது பைக்கை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து கனிராஜ், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச்சேர்ந்த மணிகண்டன் மகன் சக்திகணேஷ் (22) என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சக்திகணேஷ்சை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பைக் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் சக்திகணேஷ், மதுரையில் இரண்டு இடங்களில் பைக் திருடியது தெரிய வந்தது.
இந்த மூன்று பைக்குகளில் ஒரு பைக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜா (46) என்பவரிடம் விற்றுள்ளார். அவர், அங்குள்ள பேரூராட்சியின் 2வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பதும், முன்னாள் பேரூராட்சி சேர்மனாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.