தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக கவுன்சிலர் கனிமொழி தனது வார்டுக்கு தலைவி நிதி ஒதுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தலைவிக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உரிய பதில் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கனிமொழி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டை சுமத்தினர். கவுன்சிலர் கனிமொழி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்ச்செல்வி தனக்கு பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய தமிழ்ச்செல்வி, எல்லா உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கி கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவர் எனது மருமகனை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார், ஆனால் கனிமொழியின் கணவர் சாராய வியாபாரி என குற்றம்சாட்டினார்.
இதே போல செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தலைவி தமிழ்ச்செல்வி கணவர் சட்டவிரோதமாக போதை பொருட்களை விற்று வருகிறார், ஏற்கனவே அவர் மீது வழக்கு உள்ளது. ஆனால் தமிழ்ச்செல்வி இதற்கெல்லாம் துணை போகிறார், அவர்களுக்கு உடந்தையாக எம்எல்ஏ ராஜா செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.