நெல்லை மாவட்டம் நான்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிருபராக உள்ளார். இன்று காலையில் வழக்கம் போல் வானமாமலை மற்றும் அவரது மனைவி 9 மணியளவில் கடையை திறந்துள்ளார்கள்.
அப்போது மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர். அந்த வெடிகுண்டு வெடிக்க வில்லை. தொடர்ந்து, இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் டிஎஸ்பி அசோக் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மேலும் தீவிர விசாரணை நடைபெற உள்ளது. அதோடு, தொடர்பாக தடவியல் நிபுணர் குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.