விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குன்னூர் பீட் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளது. இதனை கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து கிருஷ்ணன் கோவில் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்காத வகையில் பத்திரமாக மீட்டு கோவிந்த நல்லூர் குடோன் ஒன்றில் வைத்துள்ளனர்.
மேலும் மலைப் பகுதியில் கைப்பற்றப்பட்ட இந்த நாட்டு வெடிகுண்டுகள் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா அல்லது தேர்தல் சமயத்தில் நாட்டு வெடிகுண்டு கிடைத்திருப்பதால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் வேறு யாரும் வைத்தார்களா என்ற பல்வேறு கோணத்தில் கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்தது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.