கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக கெலமங்கலத்திற்கு கஞ்சா கடத்தி கொண்டு செல்வதாக ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸார் ஒசூர் அருகே உள்ள பைரமங்கலம் பிரிவு சாலையில் திடீர் வாகன சேதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குபின் முரனாக பேசியதால், சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.
சோதனையில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தன் (31) மற்றும் அவரது மனைவி ராணி (32) என்பதும் இருவரும் கெலமங்கலம் அருகே ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் வீடு வாடகை எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் மதிப்பு சுமார் 80 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகிறது.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.