கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35). பழைய கார்களை வாங்கி, விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அய்யாசாமியின் வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது, வீட்டின் படுக்கை அறையில் கணவன் – மனைவி இருவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்தனர். இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார் நடத்திய விசாரணையில், கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததாலும், காதல் திருமணம் செய்து குழந்தைகள் இல்லாத நிலையில் உறவினர்கள் யாரும் இவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்த விபரீத முடிவை இருவரும் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுவதாக தெரிய வந்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.