கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35). பழைய கார்களை வாங்கி, விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அய்யாசாமியின் வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது, வீட்டின் படுக்கை அறையில் கணவன் – மனைவி இருவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்தனர். இதனை பார்த்து அதிர்ந்து போன போலீசார் நடத்திய விசாரணையில், கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததாலும், காதல் திருமணம் செய்து குழந்தைகள் இல்லாத நிலையில் உறவினர்கள் யாரும் இவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்த விபரீத முடிவை இருவரும் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுவதாக தெரிய வந்துள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.