திருப்பூர் அருகே நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவி பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அணுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரேடியேட்டர் கம்பெனியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேடியேட்டரை திருடியதாக மதுரையை சேர்ந்த கருப்பசாமி (வயது 29) என்பவரை காமநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
45 நாட்கள் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்தார்.
இதனால் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கருப்புசாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராக கருப்புசாமி வந்திருந்தார்.
வாரண்ட் ரீ கால் ஆகாமல் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கருப்புசாமி தனது மனைவி கையில் வைத்திருந்த பிளேடை பிடுங்கி தனது கழுத்தை அறுத்து கொண்டார்.
இதனை கண்ட அவரது மனைவியும் தனது கையை அறுத்துக் கொண்டார். இதனை கண்ட காவலர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவி தற்கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.