புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 191 சென்ட் நிலத்தை கடந்த 1984ல் ஆதிதிராவிட குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்த சென்ட் ஒன்றுக்கு 450 ரூபாயை நீதிமன்றம் நிர்ணயித்த நிலையில் ராமசாமிக்கு மொத்தம் உள்ள தொகையில் 3.98 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை இதனால் வரை வரவில்லை என்று கூறி ராமசாமி புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ராமசாமிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 5,28,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் இதனால் வரை கொடுக்காததால் சார்பு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் ஆதிதிராவிட குடியிருப்பு கட்ட 1992ல் 186 சென்ட் நிலத்தை கையகப்படுத்த ஒரு சென்டருக்கு 1500 ரூபாயை நீதிமன்றம் நிர்ணயத்த நிலையில் மொத்த தொகையிலிருந்து 4,71,438 ரூபாயை வழங்காததால் அவர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு கொடுக்கவேண்டிய தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 7,58,000 ரூபாயை நடேசனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இது நாள் வரை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் சார்பு நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இரு வேறு வழக்குகளிலும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள சார்பு நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்ற அமினா,பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்பொழுது துணை ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.