தமிழகம்

சவுக்கு சங்கர் வழக்கில் டுவிஸ்ட்.. நடந்த அதிரடி மாற்றம் : நீதிபதி உத்தரவு!!

பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது

இதனிடையே பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த சவுக்குசங்கர் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையானது நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை இதனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித் து நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்

இதையும் படியுங்க: பாஜக நிர்வாகியை படுகொலை செய்த திமுக ரவுடிகள்.. ஆதாரத்துடன் அண்ணாமலை புகார்!!

இந்த நிலையில், சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து சென்னை விரைந்து சென்ற தேனி பிசி பட்டி காவல்துறையினர் தேனிக்கு கொண்டுவந்தனர்.

பின்னர் நேற்றுமுன்தினம் சவுங்கு சங்கரை தேனி PC பட்டி காவல்துறையினர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமல செல்வன் முன்பாக ஆஜர்படுத்தினர்.

அப்போது சவுக்குசங்கர் தரப்பில் பிடியாணையை ரத்துசெய்ய கோரிய மனுவை ஏற்க மறுத்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்து தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என சவுக்குசங்கர் கோரிய வழக்கில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்ட பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

4 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

7 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

7 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

7 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

8 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

8 hours ago

This website uses cookies.