கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுவுக்கு வாய் கிழிந்ததால் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் காட்டுசெல்லூர் இந்த கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 33). இவருக்கு சொந்தமான பசுமாடு அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்மயில் என்பவரது கரும்பு நிலத்தின் வரப்பில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது வரப்பில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிமருந்தை கடித்ததில் பசு மாட்டின் வாய் கிழிந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், மேமாலூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி(வயது 61) என்பவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வேல்மயில் என்பவரது விவசாய வரப்பில் அவருக்கு தெரியப்படுத்தாமல் வெடிமருந்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணையில் செய்ததில் குழந்தைசாமி காட்டுப்பன்றிகளை வெடி வைத்து பிடித்து அதன் இறைச்சியை விற்பனை செய்வதே வழக்கமாக வைத்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து குழந்தைசாமியை கைது செய்த ரிஷிவந்தியம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான் வேட்டையாடிய வழக்கில் ரிஷிவந்தியம் போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டவர் இந்த குழந்தைசாமி என்பது குறிப்பிடத்தக்கது. வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மாட்டின் மதிப்பு சுமார் 40ஆயிரம் ஆகும்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.