Categories: தமிழகம்

தாழ்வாக தொங்கிய மின்கம்பி…மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ‘ஷாக்’ அடித்து உயிரிழந்த பரிதாபம்: பொதுமக்கள் சாலைமறியல்..!!

மயிலாடுதுறை அருகே தாழ்வாக தொங்கிய மினகம்பியில் சிக்கி பசுமாடு உயிரிழந்ததால் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் விவசாயி வடிவேல்(65). இவரது பசுமாடு மதியம் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ச்சலுக்கு சென்றபோது மிகத்தாழ்வாக தொங்கிய மினகம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்தில் இறந்தது.

இதனால் அந்த பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தியவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இரவு எட்டு மணி வரை மின்வாரிய ஊழியர்கள் வந்து சரி செய்து மின் சப்ளை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயல்வெளிகளில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் பசுமாடு உயிரிழப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை – மணல்மேடு வழித்தடத்தில் கடுவங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை சரி செய்து மின் வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர் இதனால் அப்பகுதியில் அரைமணிநேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிப்படைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

46 minutes ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

1 hour ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

2 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

2 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

2 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.