பெரியார் சிலை மீது மாட்டுச் சாணம் வீசிய மர்மநபர்கள்… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி : ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!!
பொள்ளாச்சி அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் தந்தை பெரியாரின் உருவ சிலை உள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் பெரியாரின் சிலை மீது சாணியை பூசி சென்றுள்ளனர்.இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல் நிலைய போலீசார் அவசர அவசரமாக தண்ணீரை ஊற்றி பெரியாரின் சிலையை சுத்தம் செய்தனர்.
பெரியார் சிலை மீது சாணியை பூசி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.மேலும் சிலை மீது சாணியை பூசி சென்ற மர்ம நம்பர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.