காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்விளக்கிற்கு செல்லும் வயரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்பந்தம் விடப்பட்டது. மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகளுக்கு செல்லும் மின்வயர்கள் தகுந்த பாதுகாப்பின்றி வெட்டவெளியில் உள்ளது. அவ்வாறு பாதுகாப்பின்றி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மின்வயர்களால் அவ்வப்போது மக்கள் பாதிப்படைகிறார்கள்.
இந்நிலையில் மாநகராட்சியின் சார்பில் கிழக்கு ராஜவீதி பகுதியில் அமைப்பட்டுள்ள தெருமின் விளக்கு கம்பத்திலிருந்து வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருந்த மின்வயரில் இருந்து மின்சாரம் கசிந்து அந்த வழியாக சென்ற கர்ப்பிணி பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதால் அந்த கர்ப்பிணி பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பசுமாடு துடிதுடித்து இறந்ததை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 50 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு இறந்ததை அறிந்த மாட்டின் உரிமையாளர் விஜயகுமார் கதறி அழுதார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை தெரு பகுதியில் தெருமின் விளக்கு மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு பசு மாடு துடிதுடித்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.