Categories: தமிழகம்

காஞ்சி மாநகராட்சியின் அலட்சியம்…பசுக்களின் உயிர்களை பலி வாங்கும் மின்சாரம்: துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி பசுமாடு..!!

காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்விளக்கிற்கு செல்லும் வயரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்பந்தம் விடப்பட்டது. மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகளுக்கு செல்லும் மின்வயர்கள் தகுந்த பாதுகாப்பின்றி வெட்டவெளியில் உள்ளது. அவ்வாறு பாதுகாப்பின்றி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மின்வயர்களால் அவ்வப்போது மக்கள் பாதிப்படைகிறார்கள்.

இந்நிலையில் மாநகராட்சியின் சார்பில் கிழக்கு ராஜவீதி பகுதியில் அமைப்பட்டுள்ள தெருமின் விளக்கு கம்பத்திலிருந்து வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருந்த மின்வயரில் இருந்து மின்சாரம் கசிந்து அந்த வழியாக சென்ற கர்ப்பிணி பசுமாடு மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதால் அந்த கர்ப்பிணி பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பசுமாடு துடிதுடித்து இறந்ததை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 50 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு இறந்ததை அறிந்த மாட்டின் உரிமையாளர் விஜயகுமார் கதறி அழுதார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியர்களிடம் மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை தெரு பகுதியில் தெருமின் விளக்கு மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு பசு மாடு துடிதுடித்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

8 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

9 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

9 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

10 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

10 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

10 hours ago

This website uses cookies.