நத்தத்தில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் பலி- சிசிடிவியில் பதிவான பத பதைக்கும் வீடியோ காட்சிகள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது42) இவர் நத்தம் இ.பி அலுவலகம் முன்பாக மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். அழகர்சாமிக்கு மனைவி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு நத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு அவரும் அவரது உறவினர் மாணிக்கம் என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராக்காச்சி புரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது காந்திஜி கலையரங்கம் முன்பாக மாடு குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் ஏற்றப்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அழகர்சாமி இன்னும் சில தினங்களில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நத்தம் பகுதி சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்த பதபதைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…
அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…
தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…
விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…
ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கங்குவா" படம் எதிர்பார்த்த அளவில்…
This website uses cookies.