திண்டுக்கல் : ஆளில்லாத நடுக்காட்டில் பசுவுக்கு தக்க சமயத்தில் பிரசவம் பார்த்த எம்பிஏ பட்டதாரி பெண் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளைய கவுண்டன் ஊரைச் சேர்ந்த தண்டபாணி சண்முகவள்ளி தம்பதிகளின் இருபத்தி மூன்று வயது மகள் சுதர்சனா. எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் வங்கியில் துணை மேலாளராக பணி கிடைத்துள்ள நிலையில் தனது வீட்டில் இருக்கும் பசுமாட்டின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பசுமாட்டை பிடித்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுவது சுதர்சனாவின் வழக்கம்.
இந்நிலையில் இன்று காட்டுப் பகுதிக்கு கர்ப்பமடைந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்ற பொழுது திடீரென பசுமாடு சுருண்டு படுத்தது. அதற்கு பிரசவ வலி என அறிந்த சுதர்சனா தனது தாய் தந்தையருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால் பசுமாடு துடிப்பதை பார்த்த பதறிய சுதர்சனா யாருக்கும் காத்திருக்காமல் பசுமாட்டிற்கு தானே பிரசவம் பார்த்தார். வயிற்றில் இருந்து வெளியே வந்த கன்றுக்குட்டியின் கால்களை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தார்.
பசு மாட்டிற்கு பட்டதாரிப் பெண் பயமில்லாமல் துணிச்சலாக பிரசவம் பார்த்தது அப்பகுதியினரிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.