கள்ளக்குறிச்சியில், பெண் விஏஓ மீது அலுவலகம் புகுந்து மாட்டுச்சாணம் வீசிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலராக தமிழரசி என்பவர் உள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்றும் பெண் விஏஓ தமிழரசி பணியில் இருந்துள்ளார். அப்போது, சங்கீதா என்பவர் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து, தமிழரசி மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.
அது மட்டுமல்லாமல், தான் கொண்டு வந்த மாட்டுச் சாணத்தை விஏஓ மீது வீசியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சங்கீதா அதே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்த நிலையில், அண்மையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இதனால் ஆத்திரத்தில் இருந்த சங்கீதா, இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்ட விஏஓ மிழரசி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழரசி கூறுகையில், “நான் அலுவலகத்தில் இருந்தேன். திடீரென எனது பின்பக்கத்தில் பார்வையில் தெரியாத மாதிரி உள்ளே வந்த சங்கீதா, ஒரு கவரில் இருந்த மாட்டுச் சாணத்தை எடுத்து எனது முகத்தில் அடித்தார்.
அது மட்டுமல்லாமல், என்னை இழுத்து கீழே போட்டு தாக்கினார். அப்போது, ‘இது என்னுடைய ஊர், நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன். யார் வந்து உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நான் பார்க்கிறேன். உன்னைல் கொல்லாமல் விடமாட்டேன்’ எனச் சொல்லி கதவை மூடிக்கொண்டு தாக்க ஆரம்பித்தார்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கணவருடன் கண்ணாமூச்சி ஆடிய கள்ளக்காதலன்.. தோட்டத்து வீட்டில் காத்திருந்த மனைவி.. எதிர்பாரா திருப்பம்!
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில், அலுவலகத்தில் வைத்து விஏஓ தமிழரசியை, சங்கீதா பூட்டிவிட்டுச் சென்றதும், இதனை வீடியோவாக எடுத்த வீஏஓ, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.